Published : 12 Feb 2015 10:49 AM
Last Updated : 12 Feb 2015 10:49 AM

உதவி பேராசிரியர் பணிக்கு பிப்.25-ல் நேர்காணல்

அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷூவல் கம்யூனிகேஷன், இந்திய கலாச்சாரம், மனித உரிமைகள் ஆகிய 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.

தகுதியுள்ள விண்ணப் பதாரர்களுக்கு இதற்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படும். மேலும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x