Last Updated : 12 Feb, 2015 10:04 AM

 

Published : 12 Feb 2015 10:04 AM
Last Updated : 12 Feb 2015 10:04 AM

ஏப்ரல் 8-ம் தேதி தொடங்குகிறது: ஐபிஎல் போட்டி அட்டவணை அறிவிப்பு

ஐபிஎல் 8-வது சீசன் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் மோதுகின்றன.

நான்கு பிளே ஆஃப் போட்டிகள் உட்பட மொத்தம் 60 போட்டிகள் 47 நாட்களில் நடைபெறவுள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது மூன்று போட்டிகளை உள்ளூர் அணி என்ற அடிப்படையில் புணேயில் விளையாடும். அதேபோன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது மூன்று போட்டிகளை விசாகப்பட்டினத்தில் விளை யாடும்.

டெல்லி டேர் டெவில் அணி 2 போட்டிகளை ராய்பூர் மைதானத்தில் உள்ளூர் அணி என்ற அடிப்படையில் விளையாடும். ராஜஸ்தான் ராயல் அணி தனது உள்ளூர் போட்டிகளை அகமதபாத்தில் விளையாடும்.

இறுதிப் போட்டி கொல்கத்தா வின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். இதற்கான அறிவிப்பை ஐபிஎல் ஆட்சிக் குழு தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x