Published : 09 Feb 2015 10:13 AM
Last Updated : 09 Feb 2015 10:13 AM

ஆனந்த் மீண்டும் தோல்வி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் கிரென்கெ கிளாசிக் செஸ் தொட ரின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி யடைந்தார்.

முன்னதாக நடப்பு உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸெ னிடம் 4-வது சுற்றில் தோல்வி யடைந்திருந்த ஆனந்த், 5-வது சுற்றில் ஆர்மீனியாவின் லெவோன் ஆர்னியானை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் ஆனந்த் தோல்வியுற்றார். இதன் மூலம் இத்தொடரில் 1.5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். இன்னும் இரண்டு சுற்றுகளே எஞ்சியுள்ள நிலையில், 6-வது சுற்றில் ஜெர்மனி யின் பாராமிட்ஸுடன் மோதவிருக் கிறார் ஆனந்த்.

5-வது சுற்று முடி வில் கார்ல்ஸென் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஜெர்மனியின் நெய்டிட்ச் 3.5 புள்ளிகளுடன் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x