Last Updated : 02 Feb, 2015 08:50 PM

 

Published : 02 Feb 2015 08:50 PM
Last Updated : 02 Feb 2015 08:50 PM

உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை: யுவராஜ், கம்பீர் ஏமாற்றம்

உலகக்கோப்பை அணியில் இடம்பெறாமல் போனது பெரும் ஏமாற்றளிப்பதாக யுவராஜ் சிங், கம்பீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நியூஸ்24 கிரிக்கெட் கான்க்ளேவ்வில் கலந்து கொண்ட போது இவர்கள் இருவரும் ஏமாற்றம் தெரிவித்தனர்.

2011 உலகக்கோப்பையில் விளையாடிய சேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், முனாப் படேல், நெஹ்ரா ஆகியோரை அணித்தேர்வுக் குழு புறக்கணித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

"உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த முடிவு நம் கையில் இல்லை. இப்போதைக்கு நான் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். இதில் சிறப்பாக விளையாடி அணிக்குள் மீண்டும் வர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.” என்றார் யுவராஜ் சிங்.

கம்பீர் கூறும்போது, “நான் ரன்களை எடுத்து போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக கிரிக்கெட் ஆடுகிறேன். இந்திய அணி, டெல்லி, ஐபிஎல் அணி என்று எதில் விளையாடினாலும் ரன்கள் அடிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு.

இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து எனக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது. நாம் கடந்த உலகக்கோப்பை சாம்பியன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை அணியிலும் விளையாட நிச்சயமான விருப்பம் என்னிடத்தில் இருந்தது.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x