Published : 02 Feb 2015 09:23 AM
Last Updated : 02 Feb 2015 09:23 AM

பொதுமக்கள் பார்வைக்காக சென்னையில் உலகக் கோப்பை

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, சென்னையில் உலகக்கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

எம்.ஆர்.எஃப். நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நேற்று மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகிய இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை எழுதும் வகையில் ஒரு பேனரும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த உலகக் கோப்பையை, நடிகர்கள் ஸ்ரீகாந்த், நிதின் சத்யா, வைபவ், அசோக் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், ராகுல் நம்பியார், ஆதி, விஜய் வசந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு, தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்தனர். இந்த உலகக் கோப்பை இன்று ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகிறது.

உலகக் கோப்பையுடன் நடிகர்கள் காந்த் மற்றும் அசோக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x