தேசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம்

தேசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம்
Updated on
1 min read

கேரளாவில் நடைபெற்று வரும் 35-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது.

மகளிர் பிரிவில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா தங்கப் பதக்கம் வென்றார். இறுதி ஆட்டத்தில் அவர் மற்றொரு தமிழக வீராங்கனை ஆர்.லக்ஷயாவை எதிர்கொண்டு விளையாடினார். இதில் ஜோஷ்னா வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். லக் ஷயாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஸ்குவாஷ் ஆடவர் பிரிவிலும் நேற்று தமிழகத்தின் ஆதிக்கமே தொடர்ந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் சவ்ரவ் கோஷல் தங்கமும், ஹரிந்தர் பால் சிங் சந்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஸ்குவாஷ் மற்றொரு ஆடவர் பிரிவில் தமிழக வீரர் ரவி தீக் ஷித் வெண்கலம் வென்றார். டென்னிஸ் போட்டியில் தமிழகத்துக்கு ஒரு தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் ஏற்கெனவே தமிழகம் தலா ஒரு தங்கம் வென்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகம் 6 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 16 பதக்கங் களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

சர்வீசஸ் அணி 20 தங்கத்துடன் முதலிடத்திலும், ஹரியாணா 19 தங்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன. கேரளா 6 தங்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in