Published : 02 Feb 2015 10:14 AM
Last Updated : 02 Feb 2015 10:14 AM
அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த ஜனவரி மாதம் 33,688 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். பணவீக்கம் குறைந்தது மற்றும் ஜனவரி 15-ம் தேதி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது ஆகிய காரணங்களால் முதலீடு உயர்ந்துள்ளது.
இதில் 12,919 கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையிலும், 20,769 கோடி ரூபாய் இந்திய கடன் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதத்துக்கு பிறகு ஒரே மாதத்தில் அதிக முதலீடுகள் இப்போதுதான் வந்திருக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் 36,046 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT