Published : 07 Jan 2015 12:04 PM
Last Updated : 07 Jan 2015 12:04 PM

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு 246 ஆல்அவுட்

பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்கால் தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழகம், 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. பிரசன்னா 35, சதீஷ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். நேற்று ஆட்டம் தொடங்கியபோது தமிழக அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 88.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். அசோக் டிண்டா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங் ஸில், பெங்கால் கவனமாக ஆடியது. 2-ம் நாள் ஆட்ட முடிவில், 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. ஈஸ்வரன் 41, மனோஜ் திவாரி 54 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

சுருக்கமான ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ்: தமிழ்நாடு 246 (தினேஷ் கார்த்திக் 92, பிரசன்னா 50, அசோக் டிண்டா 4வி/ 76)

பெங்கால் 183/2 (மனோஜ் திவாரி 54, ஏ. தாஸ் 48, பாலாஜி 1வி/46)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x