Published : 01 Jan 2015 10:13 AM
Last Updated : 01 Jan 2015 10:13 AM

தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை ஐயப்ப பக்தர் கைது

தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை ஐயப்ப பக்தர் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கையிலுள்ள கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(24). ஐயப்ப பக்தரான இவர் சபரிமலைக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் ஐயப்ப பக்தர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வரவே மணிகண்டனை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x