Last Updated : 05 Jan, 2015 05:07 PM

 

Published : 05 Jan 2015 05:07 PM
Last Updated : 05 Jan 2015 05:07 PM

அணியின் பதிலி கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி தகவல்

சிட்னியில் நடைபெறவுள்ள 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மகேந்திர சிங் தோனி பதிலி விக்கெட் கீப்பராக நீடிப்பதாக, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தற்போதைக்கு இந்திய அணியின் பதிலி விக்கெட் கீப்பராக தோனி உள்ளார். சாஹாவுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் தோனி அணியில் இடம்பிடிப்பார்.

தற்போது சாஹா முழு உடல் திறனுடன் உள்ளார். ஆனால், ஒருவேளை ஏதாவது காயமோ அல்லது திடீர் உடல்நலக் குறைவோ ஏற்பட்டுவிட்டால், அவருக்கு பதிலாக தோனி களமிறங்குவார்" என்றார்.

விசித்திரமான தருணம் அது!

மெல்போர்ன் டெஸ்ட்டுக்குப் பிறகு தோனி ஓய்வு அறிவித்தது குறித்து விவரித்த விராட், "மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த பிறகு வீரர்களின் ஓய்வறையில் நாங்கள் இருந்தோம்.

அப்போதுதான், தாம் ஓய்வு பெறப் போகும் தகவலை தோனி சொன்னார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. விசித்திரமான தருணம் அது.

என்னைப் போன்ற இளைஞர்கள் அவருடைய தலைமையில்தான் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினோம். கடினமான நேரங்களில் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். நானும் தோனியைப் போல அமைதியான கேப்டனாக இருப்பேன் என நம்புகிறேன்" என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x