Published : 11 Jan 2015 04:18 PM
Last Updated : 11 Jan 2015 04:18 PM

சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் அல்ஜாஸ்

பரபரப்பாக நடைபெற்று வரும் ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பிடென் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அவர் 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டாவை வென்றார். இந்த அரையிறுதி ஆட்டம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்தது.

இதில் இருவரும் சளைக்காமல் போராடினர். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பவுடிஸ்டா வென்றார். இதையடுத்து 2-வது செட்டில் அல்ஜாஸ் ஆக்ரோஷமாக விளையாடினார். அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் அல்ஜாஸ் வென்று பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து 3-வது செட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். எனினும் கடைசி கட்டத்தில் அல்ஜாஸின் கை ஓங்கியது. அவர் 7-6 என்ற கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றி ஆட்டத்தில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x