Published : 29 Dec 2014 10:09 AM
Last Updated : 29 Dec 2014 10:09 AM

விளையாட்டு செய்தித் துளிகள்

›› கிறைஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து இலங்கை இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கவீரர் கருணாரத்னே 152 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் பெற்ற இலங்கை, இன்னமும் 10 ரன்கள் பின்தங்கியுள்ளது.

›› சென்னை:

தமிழ்நாடு ரயில்வே இடையே நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், முதல் நாள் முடிவில் தமிழக அணி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. முகுந்த் 57 ரன்கள் எடுத்தார். பிரசன்னா 0, இந்திரஜித் 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

›› புதுடெல்லி:

இந்திய கால்பந்து அணி, சர்வதேச கால்பந்து தரவரிசையில் 171-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய கால்பந்து வரலாற்றில் இந்தளவுக்கு மோசமான இடத்தை இதற்கு முன்பு பிடித்ததில்லை. 2014ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி 156-வது இடத்தில் இருந்தது.

›› மும்பை:

இந்த ஆண்டுக்கான அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரராக சுனில் சேத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி கேப்டனான சுனில், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை இந்த விருதைப் பெற்றுள்ளார்.

›› போர்ட் எலிசபெத்:

தென் ஆப்பிரிக்கா மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x