Published : 15 Dec 2014 03:20 PM
Last Updated : 15 Dec 2014 03:20 PM
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
ஒடிஸா தலைநகர் புவனேசுவரத் தில் நேற்று நடைபெற்ற சாம்பி யன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பலமான ஜெர்மனி அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. ஆரம்பம் முதல் ஜெர்மனி வீரர்கள் அட்டகாசமாக ஆடினார்கள். 18-வது நிமிடத்தில் ஜெர்மனி முதல் கோலடித்தது. இந்த கோலை வெஸ்லி அடித்தார். பிறகு 57-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது ஜெர்மனி.
இந்த கோலை ப்ளோரியன் அடித்தார். இறுதிவரை போராடியும் பாகிஸ்தான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் டிராபியை வென்றுள்ளது ஜெர்மனி.
இந்தியாவுக்கு 4-வது இடம்
3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-1 என்கிற கோல் கணக்கில் ஆஸி. வெற்றியடைந்தது. இந்த ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் எடி ஒகென்டென் கோலடித்தார். ஆனால் 42-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது இந்தியா. இந்த கோலை லலித் உபாத்யாய் அடித்தார். இதையடுத்து 52–வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 2-வது கோலை அடித்தது. இந்த கோலை மேட் கோட்ஸ் அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்கிற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இப்போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணிக்கு 4-ம் இடம் தான் கிடைத்தது.
போட்டியின் முடிவுகள்
1. ஜெர்மனி
2. பாகிஸ்தான்
3. ஆஸ்திரேலியா
4. இந்தியா
5. நெதர்லாந்து
6. அர்ஜெண்டினா
7. இங்கிலாந்து
8. பெல்ஜியம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT