Published : 26 Dec 2014 01:14 PM
Last Updated : 26 Dec 2014 01:14 PM

மாநில பார்வையற்றோர் செஸ் மதுரையில் தொடக்கம்

மாநில அளவிலான பார்வையற்றோர் செஸ் போட்டி மதுரையில் நேற்று தொடங்கியது.

சுவாமி விவேகானந்தா வித்யாமந்திர், இந்திய சேவைச் சங்கம் (சக்ஷம்), சென்னை நியூ விஷன் பிரண்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு பிரெய்ல் சதுரங்க சங்கங்கள் ஆகியவை சார்பில் நடைபெறும் இரண்டாவது மாநில அளவிலான பார்வையற்றோருக்கான செஸ் போட்டி, மதுரை ஹார்விப்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யாமந்திர் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில், தமிழகத்தின் 20 மாவட்டங்களிலிருந்து நூறு பார்வையற்றோர் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அடுத்த கல்வியாண்டு முதல் பார்வையற்றோர்களுடன், மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து மாநில அளவிலான செஸ் போட்டி நடத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x