Published : 16 Dec 2014 10:11 AM
Last Updated : 16 Dec 2014 10:11 AM
தனியார் நடத்தும் நாய் கண்காட்சியைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் கால்நடைத் துறைக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
சென்னை கேனைன் கிளப் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘எங்கள் அமைப்பு சார்பில் பல ஆண்டுகளாக நாய் கண்காட்சி நடத்திவருகிறோம். இதில் நாய்கள் எதுவும் துன்புறுத் தப்படுவதில்லை.
எனவே, நாய் கண்காட்சி நடத்துவதில் விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை தலையிட தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. தமிழக கால்நடைத் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் சஞ்சய்காந்தி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.
‘‘நாய்களைக் கண்காணிப்பது, பாதுகாப்பது, விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுப்பது போன்றவை கால்நடை பராமரிப்புத் துறையின் முக்கிய கடமைகள்.
தனியார் அமைப்புகள் நடத்தினாலும்கூட, நாய் கண்காட்சி களை கண்காணிப்பதுடன், சட்டத் துக்குப் புறம்பாக நடந்து கொண் டால் நடவடிக்கை எடுக்கவும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு உரிமை உள்ளது’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT