Published : 10 Dec 2014 11:28 AM
Last Updated : 10 Dec 2014 11:28 AM
பெங்களூருவில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், கர்நாடக அணி 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாம் நாளான நேற்று, 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் என்கிற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய தமிழக அணி, விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்ததால் 274 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. எதிர்பாராத விதமாக கடைசி 5 விக்கெட்டுகள் 19 ரன்களுக்கு வீழ்ந்தன. கர்நாடகாவின் எஸ். அரவிந்த் 4 விக்கெட்டுகள் எடுத்தார். கர்நாடகம் முதல் இன்னிங்ஸில் 16 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த கர்நாடகம், அதிரடியாக ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 62 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 80 ரன்கள் குவித்தார். இதனால் கர்நாடகம் 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று போட்டியின் கடைசி நாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT