Published : 15 Dec 2014 03:23 PM
Last Updated : 15 Dec 2014 03:23 PM

ஐஎஸ்எல் : கொல்கத்தா – கோவா ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், அட்லெடிகோ டி கொல்கத்தா - கோவா எப்சி அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதி முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து இரு அணிகளும் சிறப்பாக ஆடினாலும் கோவா அணி ஆதிக்கம் செலுத்தியது. இடைவேளைக்குப் பிறகும் கோவா வீரர்கள் தீவிர மாக ஆடினார்கள். ஆனாலும் இறுதிவரை இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்த அணிகளின் 2-வது சுற்று ஆட்டம் 17-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x