Last Updated : 03 Dec, 2014 10:53 AM

 

Published : 03 Dec 2014 10:53 AM
Last Updated : 03 Dec 2014 10:53 AM

முத்தரப்புத் தொடரில் மாற்றம்: முதல் ஆட்டத்தில் ஆஸி.-இங்கிலாந்து மோதல்

பிலிப் ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இப்போது முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் முத்தரப்புத் தொடருக்கு தயாராவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளது. 2-வது ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. முன்னதாக முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா, 2-வது போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஜனவரி 12-ம் தேதி சிட்னியில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் இப்போது மாற்றப்பட்டுள்ளது. அதே தேதியில் மனுகா ஓவலில் நடைபெறும் போட்டியில் ஆக்ட் லெவன் அணியுடன் மோதுகிறது இங்கிலாந்து. இந்தியா விளையாடும் பயிற்சி போட்டிக்கான தேதி மற்றும் மைதானம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x