இஷாந்த் சர்மா, ஸ்மித்துக்கு அபராதம்

இஷாந்த் சர்மா, ஸ்மித்துக்கு அபராதம்
Updated on
1 min read

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிமுறைகளை மீறிய தற்காக இஷாந்த் சர்மா, ஸ்மித் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவுட் ஆனபோது தகாத வார்த் தைகளைப் பேசிய காரணத் துக்காக இந்தியாவின் இஷாந்த் சர்மாவுக்கு ஆட்டத் தொகை யிலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்தி ரேலிய பவுலர்கள் நிர்ணயிக் கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசியதால் ஆஸி. கேப்டன் ஸ்மித்துக்கு ஆட்டத் தொகையிலிருந்து 60 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு 30 சதவீத மும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in