Published : 06 Apr 2014 12:00 AM
Last Updated : 06 Apr 2014 12:00 AM

டேவிஸ் கோப்பை: சோம்தேவ் வெற்றி

இந்தியா – தென்கொரியா இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தென்கொரியாவின் பூஸன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆசிய ஓசியானா பிரிவு 1 பிளே ஆப் சுற்று போட்டியான இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தென்கொரியாவின் ஹீயோன் ஷுங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 7-6(7-4), 7-6(7-3), 6-4 என்ற செட் கணக்கில் சோம்தேவ் வெற்றி பெற்றார்.

அதே நேரத்தில் மற்றொரு இந்திய வீரர் சனம் சிங் தோல்வியடைந்தார். அவரை யோங் கு லிம் வென்றார். இதனால் முதல்நாள் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரட்டையர் பிரிவில் போபண்ணா – மைநெனி ஜோடி விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x