Published : 02 Nov 2014 04:14 PM
Last Updated : 02 Nov 2014 04:14 PM
கட்டக்கில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில், இந்தியத் தொடக்க வீரர்களான ரஹானேவும் தவனும் அதிரடி சதமடித்தனர்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஒடிசா மாநிலம் கட்டக்கில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே, தவன் இருவரும் ஆரம்பம் முதலே அற்புதமாக பேட் செய்தனர்.
முதலில் ரஹானேவும், பின்னர் தவனும் தங்கள் சதத்தைப் பூர்த்தி செய்தனர். இந்தியா 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 225 ரன்கள் குவித்துள்ளது. இருவரும் தலா 108 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதை ஈடுகட்டும் வகையில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானதாகும்.
இலங்கை அணி முழு அளவில் தயாராகாத நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கி இருக்கிறது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை வலுப்படுத்திக் கொள்ள இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். கேப்டன் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்கியுள்ளது.
கோலி தலைமையில் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளை யாடியுள்ள இந்திய அணி அதில் 9-ல் வெற்றி கண்டுள்ளது. இதற்கு முன்னர் கேப்டனாக இருந்தபோது கோலி 3 சதங்களையும் அடித்துள்ளார். அதனால் கேப்டன் பதவி அவருக்கு பெரிய நெருக்கடியாக இருக்காது என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT