Published : 19 Nov 2014 10:35 AM
Last Updated : 19 Nov 2014 10:35 AM

தேசிய டேக்வாண்டோ போட்டி தூத்துக்குடி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி, மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள பார்க் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தூத்துக்குடி சேம்பியன்ஸ் டேக்வாண்டோ கிளப்பில் பயிற்சி பெறும், தூத்துக்குடி பெல் மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெரின் மைக்கேல் சப் ஜூனியர் 25- 27 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் ஜெரின் மைக்கேல் கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்றுவிட்டு, தேசியப் போட்டியில் கலந்து கொள்கிறார்.

மாணவனையும், பயிற்சியாளர்கள் செல்வம் கிறிஸ்டோபர், ராஜா ஆகியோரையும், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர, மாவட்ட டேக்வாண்டோ கழக செயலாளர் பால ஜெயராம், ஆலோசகர் கிருபாகர், தேசிய நடுவர் ஜெப்ரி ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x