Published : 26 Nov 2014 10:50 AM
Last Updated : 26 Nov 2014 10:50 AM
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடக்கிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாகும். தனது சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் படுதோல்வி கண்ட இங்கிலாந்து அணி, அதற்கு பதிலடி கொடுப்பதில் தீவிரமாக உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் படுதோல்வி கண்ட இலங்கை அணி, சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி மீண்டும் பார்முக்கு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கொழும்பில் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT