Published : 04 Jul 2019 04:50 PM
Last Updated : 04 Jul 2019 04:50 PM

சாருலதா பாட்டிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய கோலி

வங்கதேசத்துக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியை மைதானத்தில் உற்சாகப்படுத்திய சாருலதா பாட்டிக்கு, இரு போட்டிகளுக்கான டிக்கெட்டை இந்திய அணியின் கேப்டன் கோலி வாங்கிக் கொடுத்தார்.

இந்தியா- வங்கதேசம் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் மைதானத்தில் இருந்து இந்திய அணியை விசில் அடித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த பாட்டி சாருலதாவுக்கு அடுத்துவரும் போட்டிகளுக்கான டிக்கெட் பொறுப்பு தன்னுடையது என்று இந்திய கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்டிக்கு அளித்த வாக்குறுதியை இந்திய கேப்டன் விராட் கோலி நிறைவேற்றியுள்ளார்.

இதுகுறித்து சாருலதா பாட்டியின் பேத்தி அஞ்சலி கூறும்போது, ''கோலி அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியா அடுத்து இலங்கையுடன் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்டையும், அரையிறுத்திகான டிக்கெட்டையும் வழங்கியுள்ளார். 

நாங்கள் இன்னும் கூடுதலாக அவரிடம் டிக்கெட் கேட்டோம். ஆனால் கோலியால் அதனை ஏற்படு செய்ய முடியவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x