Last Updated : 30 Jun, 2019 06:44 PM

 

Published : 30 Jun 2019 06:44 PM
Last Updated : 30 Jun 2019 06:44 PM

கே.எல்.ராகுலுக்கு காயம்- பேட்டிங் செய்வாரா?

எட்பாஸ்டனில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்திய அணியில்விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய், பிளங்கெட் அணிக்குள் வந்தனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜேஸன் ராய், பேர்ஸ்டோ ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினர். இந்திய வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். முதல் 10 ஓவர்களில் 47 ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய அணியினர் அடுத்த 10 ஓவர்களில்98ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

சாஹல் வீசிய 16-வது ஓவரில் 3-பந்தை லெக் திசையில் வீச அதை தூக்கி அடித்தார் பேர்ஸ்டோ. பவுண்டரி லைனில் இருந்த கே.எல்.ராகுல் அதை பிடிப்பதற்காக தாவி குதித்தபோது, பவுண்டரி லைனுக்கு வெளியை விழுந்தார். இதில் ராகுலின் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது

சிறிதுநேரம் முதுகைப் பிடித்து நின்றிருந்த ராகுல், அங்கிருந்து ஓய்வறைகக்குச் சென்றார். அவருக்கு பதிலாக ஜடேஜா அழைக்கப்பட்டார். ராகுலின் உடல்நிலை குறித்து பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில், ராகுலுக்கு முதுகுப்பகுதியில் பந்தை பிடிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தை மருத்துவர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் களத்துக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 50 ஓவர்கள் முடியும்வரை களத்துக்கு ராகுல் வரவில்லை. ஆதலால் தொடக்க வீரராக ராகுல் களமிறங்குவாரா அல்லது ரிஷப் பந்த் களமிறங்குவாரா என்ற குழப்பம்  ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டும்தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x