Published : 10 Jul 2019 06:54 PM
Last Updated : 10 Jul 2019 06:54 PM
மான்செஸ்டரில் நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி தோனி, ஜடேஜா கூட்டணியில் பரபரப்பான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்திய அணி 174/6 என்று போராடி வருகிறது, ஜடேஜா 45 பந்துகளில் 57 ரன்களுடனும் தோனி 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஓவருக்கு 10.05 ரன்கள் தேவைப்படுகிறது, ஆனால் தோனி இருக்கும் வரை நியூஸிலாந்துக்கு கலக்கம்தான்.
இருவரும் சேர்ந்து 13 ஓவர்களில் 83 ரன்கள் என்ற கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் யுவராஜ் சிங் தன் ட்வீட்டில், “நெருக்கடி தருணத்தில் மிடில் ஆர்டர் சிங்கிள்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு நாம் தடுமாறி வருகிறோம். இங்குதான் அனுபவம் முக்கியமான பங்காற்றும். மாஹி (தோனி) நம்மை இறுதிக்குள் இட்டுச் செல்வார் என்று நம்புவோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT