Published : 01 Jul 2019 12:42 PM
Last Updated : 01 Jul 2019 12:42 PM

ரிஷப் பந்த் குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த ரோஹித்

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த்  நான்காவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு இந்திய அணியின் துணை கேப்டன் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

பேர்ஸ்டோவின் காட்டிசதம், துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், எட்ஜ்பாஸ்டனில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னதாக  நான்காவது வீரராக இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டது ரசிகர்கள் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பத்திரிகையாளர்கள் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்டனர்.

இதற்கு ரோகித் சர்மா பதிலளிக்கும்போது,.. ”நிச்சயமாக இல்லை...  ஏனென்றால் நீங்கள் எல்லாரும் ரிஷப் பந்த் விளையாட வேண்டும் என்று தானே நினைத்தீர்கள்.  நீங்கள் அனைவரும் எங்கே ரிஷப் பந்த்,  எங்கே ரிஷப் பந்த் என்று தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தீர்கள்.

இதோ நான்காவது வீரராக ரிஷப் பந்த்” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில்  ரிஷப் பந்த் இங்கிலாந்து அணிக்காக நேற்று முதல்முதலாக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 29 பந்துகளுக்கு 32 ரன்கள் சேர்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x