Last Updated : 13 Jul, 2019 04:53 PM

 

Published : 13 Jul 2019 04:53 PM
Last Updated : 13 Jul 2019 04:53 PM

ஒருநாள் போட்டி அணிக் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்கும் நேரமா?

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததையடுத்து, விரைவில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் டெஸ்ட் அணி வீரர் வாசிம் ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்த இந்திய அணி அரைறுதியில் நியூஸிலாந்திடம் 18 ரன்னில் தோல்வி அடைந்தது.

டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, கோலி, ராகுல் மிக மோசமாக ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால், இந்திய அணியில் கோலியிடம் இருந்து கேப்டன்ஷிப்பை பறித்து, ரோஹித் சர்மாவிடம் வழங்கக் கோரி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாபர் பதிவிட்ட கருத்தில் " இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில்  ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்திய அணிக்குள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆதரவாளர்களாக வீரர்கள் பிரிந்து இருக்கிறார்கள். விரைவில் இந்த விவகாரம் வெளியே வரும் என்று இந்தி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x