Published : 30 Jun 2019 09:06 PM
Last Updated : 30 Jun 2019 09:06 PM
எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டினார்
உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியதில் இருந்து இந்திய அணி ஆடிய 6 ஆட்டங்களில் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 72, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67, பாகிஸ்தானுக்கு எதிராக 77, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 என கோலி ஸ்கோர் செய்துள்ளார்.
விராட் கோலி தவிர்த்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் ஆகியோர் இதுபோன்று உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்துள்ளார்கள்.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக மற்றொரு அரைசதம் அடித்தார். இதன் மூல் உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 5 சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் கோலி இணைந்தார். இதற்கு முன் உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் ஸ்மித் மட்டுமே இருந்தார். இப்போது கோலி, 2-வது வீரராக இணைந்து இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி என்று பெற்றார்.
. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் முகமது அசாருதீன் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்திருந்தார்.
விராட்கோலி, 50 எடுத்ததன் மூலம், இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டுக்கு அணிக்கு எதிராக ராகுல் திராவிட் அடித்ததே இந்திய வீரர் ஒருவர் சேர்த்த அதிகபட்சமாகும். அதாவது ராகுல் திராவிட் இங்கிலாந்துக்கு எதிராக 1,238 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது கோலி 51 ரன்கள் சேர்த்ததன் மூலம் திராவிட்டின் சாதனையயும் முறியடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT