Published : 11 Aug 2017 10:35 AM
Last Updated : 11 Aug 2017 10:35 AM

தேசிய ஜூனியர் டென்னிஸ்

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) சார்பில் 18 வயதுக்குட்பட்டோருக்கான (ஆடவர், மகளிர்) தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டிகள் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், காஸ்மோபாலிடன் கிளப், பிரசிடன்சி கிளப், காயிதே மில்லத் கல்லூரி, எஸ்டிஏடி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஆடவர் பிரிவில் சுரேஷ், ஒகேஷ் தேஜோ, முத்து ஆதித்யா செந்தில் குமார், தீபக் செந்தில் குமார், அர்னால்டு உள்ளிட்டோரும் மகளிர் பிரிவில் வாசவி, அத்வைதா சரவணன், முரளி வாணி திவ்யா, மெகா முத்துகுமரன், கிரண் ராணி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

தகுதி சுற்று ஆட்டங்கள் 12-ம் தேதியும், பிரதான சுற்று ஆட்டங்கள் 14-ம் தேதியும் நடத்தப்படுகிறது. இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி 18-ம் தேதியும், ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் 19-ம் தேதியும் நடைபெறும் என போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x