Published : 21 Aug 2017 06:25 PM
Last Updated : 21 Aug 2017 06:25 PM

படுதோல்வி எதிரொலி: இலங்கை வீரர்கள் பேருந்தை ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆவேசம்

தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணியின் வீரர்கள் செல்லவிருந்த பேருந்தை ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆவேசமாகக் கோஷமிட்டனர்.

நல்ல நிலையிலிருந்து 216 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை பிறகு சர்வதேச தரத்திற்கும் வெகு குறைவான தரத்தில் பந்து வீசியதால் ஷிகர் தவண் அதிரடி சதம் எடுத்ததோடு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இலங்கை வீரர்கள் செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்த இடத்தில் ரசிகர்களின் ஒருபகுதியினர் முற்றுகையிட்டு, “எங்களுக்கு நம் கிரிக்கெட் திரும்ப வேண்டும்” என்றும் கிரிக்கெட்டில் அரசியல் கூடாது என்றும் கோஷமிட்டனர்.

பிறகு போலீஸ் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க, சுமார் அரைமணி நேரம் சென்று இலங்கை வீரர்களுடன் பேருந்து தம்புல்லா மைதானத்தை விட்டுச் சென்றது.

சமீபத் தோல்விகளினால் இலங்கை ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர், ஆனால் முன்னாள் வீரர்கள் அணியின் வீழ்ச்சியின்போதுதான் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சங்கக்காரா ரசிகர்களிடத்தில் அணி வீரர்களுக்கு ரசிகர்கள் தார்மிக ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x