Published : 30 Aug 2017 04:47 PM
Last Updated : 30 Aug 2017 04:47 PM

அடுத்த டெஸ்ட்டில் இதைவிடவும் சவாலாக ஆடி தொடரை வெல்வோம்: வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் உறுதி

ஆஸ்திரேலியாவை முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பெருமகிழ்ச்சியாக உள்ளது. ஷாகிப் மற்றும் தமிம் தனித்துவமான வீரர்கள். ஆட்டத்தை சீரான முறையில் ஆடி வருகிறோம். ஸ்பின்னர்கள் தைஜுல், ஷாகிப் அபாரமாக வீசினர்.

முதல் இன்னிங்ஸில் தமிம் இக்பால், ஷாகிப் ரன் கூட்டணி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. பீல்டிங் மற்றும் பல இடங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை. 150 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். வீரர்கள் தங்கள் உறுதியைக் காட்டினர்.

அடுத்த போட்டியில் இன்னும் சவாலாக, கடினமாக ஆடி தொடரை வெல்வோம் என்று நம்புகிறேன். இந்தப் பிட்சில் கீப்பிங் செய்வது, பாம்பு ஒன்று காலுக்கு அடியில் ஊர்ந்து செல்வது போன்று இருந்தது. ரசிகர்களுக்கு நன்றி, அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு கூறினார் முஷ்பிகுர் ரஹிம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x