Published : 24 Jul 2017 09:32 AM
Last Updated : 24 Jul 2017 09:32 AM

இறுதிப் போட்டியில் காஷ்யப், பிரணாய் மோதல்

யுஎஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர்களான காஷ்யப், பிரணாய் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனாஹிம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் காஷ்யப், கொரியாவின் வாங் ஹீ ஹியோவை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஷ்யப் 15-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் சீரிஸ் தொடரில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய காஷ்யப், அதன் பின்னர் 21 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் காஷ்யப், சகநாட்டைச் சேர்ந்த பிரணாயை எதிர்த்து விளையாட உள்ளார். அவரும் காயத்தில் இருந்து மீண்டு வந்தே தற்போது விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு சுவிஸ் ஓபனில் பட்டம் வென்ற பிரணாய், அதன் பிறகு களம் காணும் முதல் இறுதிப்போட்டி இதுவாகும். அரை இறுதியில் அவர், 21-14, 21-19 என்ற நேர் செட்டில் வியட்நாமின் டியன் மின்ஹ் நிகுயனை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x