Published : 27 Jul 2017 05:45 PM
Last Updated : 27 Jul 2017 05:45 PM

தன் பந்துவீச்சில் கடுமையாகக் காயப்படுத்த விரும்பிய வீரர் யார்? ஷோயப் அக்தர் ருசிகரம்

‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் உச்ச பந்து வீச்சுக் காலக்கட்டத்தில் பலவீரர்களை தன் அதிவேக பந்துகளில் காயப்படுத்தியுள்ளார்.

ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் ஸ்லேட்டர், பாண்டிங், டேமியன் மார்டின், கங்குலி, கயீஃப், லஷ்மண் உட்பட பல வீரர்களை தன் பந்து வீச்சில் காயமடையச் செய்துள்ளார் ஷோயப் அக்தர்.

ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது பற்றிக் கூறும்போது, சுமார் 19 பேட்ஸ்மென்களை காயப்படுத்த்தி வெளியேறச் செய்திருப்பதாகவும் ஆனால் தனக்கு அதில் மகிழ்ச்சியில்லை என்றாலும் ஒரேயொரு வீர்ரை கடுமையாகக் காயப்படுத்த விரும்பியதாகவும், சில முறை அதைச் செய்ததாகவும் தற்போது இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ட்விட்டரில் அக்தர் ரசிகர்களிடையே ஆவல் மேலிட்டது, யார் அந்த வீரர் என்று. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவரே ட்விட்டரில்,

“மேத்யூ ஹெய்டனையே நான் அதிகம் கடுமையாகக் காயப்படுத்த விரும்பினேன். நான் பலமுறை அப்படிச் செய்துள்ளேன், டெஸ்ட் போட்டிகள், பயிற்சி ஆட்டங்கள் என்று. ஆனால் தற்போது நாங்கள் சிறந்த நண்பர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டுமெனில் பாகிஸ்தான் அணி 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டது. அப்போது குவீன்ஸ்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அக்தர் பவுன்சரில் ஹெய்டன் உடம்பிலும், ஹெல்மெட்டிலும் அடிகள் பல வாங்கினார்.

ஒருமுறை ஹெய்டன் அருகில் சென்று அவரை கேலியும் செய்தார் அக்தர். ஆனால் அசராத ஹெய்டன் 128 ரன்களை அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x