Published : 14 Nov 2014 01:30 PM
Last Updated : 14 Nov 2014 01:30 PM

திருப்பதியில் வேற்று மத பிரச்சாரம்: மேலும் ஒருவர் கைது

திருப்பதி மலைவழிப்பாதையில் நேற்று வேற்று மதப் பிரச்சாரம் செய்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு எனும் சந்திரகிரியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைவழிப் பாதையில் ஒருவர் வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில், தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அப்போது மலை படிக்கட்டில் நின்றபடி அந்த வழியே செல்லும் பக்தர்களிடம் வேற்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடப்பாவை சேர்ந்த சிவா ரெட்டி (43) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்த வேற்று மத பிரச்சார துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை திருமலை போலீஸில் ஒப்படைத்தனர்.

கடந்த மாதம் கிருஷ்ணா மாவட்டதைச் சேர்ந்த சுதிர் எனும் மத போதகர், திருப்பதியில் வேற்று மத பிரச்சாரம் செய்து அது தொடர்பான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சுதிர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x