Published : 12 Jul 2017 10:13 AM
Last Updated : 12 Jul 2017 10:13 AM

ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக வழக்கு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை மின்னணு வாயிலாக (இ-டெண்டர்) நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரானது கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 10-வது சீசன் வரை இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றிருந்தது. இந்த உரிமம் கடந்த மே மாதம் நடைபெற்ற 10-வது ஐபிஎல் தொடருடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தை வெளிப்படை தன்னமையுடன் மின்னணு வாயிலாக (இ-டெண்டர்) நடத்த வேண்டும் என என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், இந்த வழக்கு மற்றொரு நாளில் விசாரிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x