Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

வாய்ப்பை இழந்தார் மல்யுத்த வீரர் யோகேஸ்வர்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் குளறுபடியால் சர்வதேச மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை யோகேஸ்வர் இழந்துள்ளார்.

அஜர்பைஜான் நாட்டில் நவம்பர் 22 முதல் 24 வரை கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் 35 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் யோகேஸ்வர் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார்.

ஆனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கும் போட்டி அமைப்பாளர்களுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடால் யோகேஸ்வரின் பெயர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x