Published : 11 Feb 2014 10:53 AM
Last Updated : 11 Feb 2014 10:53 AM

ஐபிஎல்: மோர்கன் விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் இயோன் மோர்கன் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியில் இருந்து கெவின் பீட்டர்சன் திடீரென ஓய்வு பெற்ற நிலையில் அவர் விட்டுச்சென்ற இடத்தைப் பிடிப்பதில் தீவிரக் கவனம் செலுத்துவதற்காக மோர்கன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நாளை பெங்களூரில் நடைபெறவுள்ள நிலையில், தனது விலகல் குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மோர்கன், “என்னுடைய விலகலை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிக்கு எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் விட்டுச்சென்ற இடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ள இயோன் மோர்கன் கவுன்டி போட்டியில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். 2012-ன் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளை யாடிய மோர்கனுக்கு, அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

7-வது ஐபிஎல் போட்டியில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியின் ஒப்பந்த வீரர்கள் இருவரில் ஒருவர் மோர்கன், மற்றொருவர் இயான் பெல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மோர்கன், 14 போட்டிகளில் 307 ரன்கள் குவித்தார். எனினும் கோல்கத்தா அணி இந்த முறை அவரை தக்கவைக்கவில்லை. ஐபிஎல் ஏலத்துக்கு அவருடைய அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x