

ஜமைக்காவில் இம்மாத தொடக் கத்தில் நடைபெற்ற தடகள போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக உசேன் போல்ட் அவ திப்பட்டார். இதையடுத்து ஜெர் மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கலந்து கொள் வதில் பிரச்சினை எழுந்தது. எனினும் லண்டன் டயமண்ட் லீக்கில் பங்கேற்று ஒலிம்பிக் போட் டிக்கு தகுதி பெறுவேன் என உசேன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் டயமண்ட் தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் இலக்கை 19.89 வினாடி களில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த 2009-ம் ஆண்டு 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடிகளில் உசேன் போல்ட் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பனமா வீரர் அலான்சோ எட்வர்ட் 20.04 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தையும், காமன்வெல்த் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த இங்கிலாந்தின் ஆடம் ஜெமிலி 20.07 வினாடிகளில் பந்தய தூரத்தை அடைந்து 3-வது இடத் தையும் பிடித்தனர்.
உசேன் போல்ட் கூறும்போது, ‘‘ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இன்னும் முழுமை யான பார்மில் நான் இல்லை. கடின மாக உழைக்க வேண்டியது இருக் கிறது.
எனினும் இந்த வெற்றி நம்பிக்கையை அளித்திருக்கிறது. தற்போதைக்கு காயங்கள் இல் லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது’’ என்றார்.
மகளிர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், அமெரிக்காவின் கென்ட்ரா ஹாரிசன் 12.20 வினாடி களில் இலக்கை கடந்து 28 ஆண்டு கால உலக சாதனையை முறியடித் தார். இதற்கு முன் கடந்த 1988-ம் ஆண்டு பல்கேரியாவின் யார்டங்கா டோங்கோவா 12.21 வினாடிகளில் இலக்கை அடைந்ததே உலக சாத னையாக இருந்தது.
100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் கலந்து கொள்ளாத நிலை யில், பிரான்சின் ஜிம்மி விகாட் முத லிடத்தை கைப்பற்றினார். அவர் பந்தய தூரதத்தை 10.02 விநாடிகளில் கடந்தார்.