Published : 17 Nov 2014 09:39 AM
Last Updated : 17 Nov 2014 09:39 AM
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயை ‘வாஷ் அவுட்’ ஆக்கியது வங்கதேசம்.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 503 ரன்களும், ஜிம்பாப்வே 374 ரன்களும் குவித்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
449 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே கடைசி நாளான நேற்று 85 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து வங்கதேம் 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT