ஜூனியர் டென்னிஸில் 284 பேர் பங்கேற்பு

ஜூனியர் டென்னிஸில் 284 பேர் பங்கேற்பு
Updated on
1 min read

வசந்த் டென்னிஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.

10 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 12, 14, 16 வயது ஆண், பெண்களுக் கென தனித்தனி பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 284 பேர் பங்கேற்றுள் ளனர்.

அவர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற் றன. அடுத்த சுற்றுப் போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளன.

அதேபோல, 50-வயதுக்கும் மேற்பட்டோருக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் வரும் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in