Published : 11 Oct 2013 11:30 AM
Last Updated : 11 Oct 2013 11:30 AM

சச்சின் ஓய்வு வருத்தமளிக்கிறது : யுவராஜ் சிங்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், சச்சினுடன் இத்தனை ஆண்டு காலம் விளையாடியது அற்புதமான அனுபவத்தை தந்ததாகவும் எனவே சச்சின், இப்போதைக்கு ஓய்வு பெறக்கூடாது என தான் வலியுறுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்தார் யுவராஜ் சிங். நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய தனக்கு கிடைத்த அந்த வெற்றியை சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், அதைத் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x