Last Updated : 24 Apr, 2017 09:32 AM

 

Published : 24 Apr 2017 09:32 AM
Last Updated : 24 Apr 2017 09:32 AM

இந்திய கிரிக்கெட் அணியில் தவணுக்கு இடமளிக்க வேண்டும்: வி.வி.எஸ் லக்‌ஷ்மண் வலியுறுத்தல்

இந்திய அணியின் தொடக்க ஆட் டக்காரராக இருந்த ஷிகர் தவண், காயம் மற்றும் மோசமான பேட்டிங் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக் காக அவர் சிறப்பாக ஆடி வரு கிறார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக அவர் 70 ரன்களைக் குவித்தார்.

இந்நிலையில் இந்திய அணி யின் முன்னாள் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வழிகாட்டியுமான வி.வி.எஸ். லக்‌ஷ்மண், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவண், மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடும் போட்டிகளில் அவர் சிறப்பாக ரன்களைக் குவித்து வருகிறார். இப்போதைய சூழ்நிலையில் சாம் பியன்ஸ் கோப்பைக்கான கிரிக் கெட் அணியில் ரோஹித் சர்மாவு டன் சேர்ந்து ஷிகர் தவணை தொடக்க ஆட்டக்காரராக களமி றக்க வேண்டும் என்று விரும்பு கிறேன். எனவே தவணை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்.

இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்தொட ரில் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி நிச்சயம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x