Published : 10 Sep 2016 09:26 AM
Last Updated : 10 Sep 2016 09:26 AM

சென்னையில் ஐ.டி.எப். சர்வதேச டென்னிஸ்

பவர்பேக் டென்னிஸ் அகாடமி சார்பில் நீதிபதி பி.எஸ். கைலாசம் நினைவு 2-வது ஐ.டி.எப். சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியின் பிரதான சுற்று வரும் 12-ம் தேதி தொடங்கு கிறது. போட்டிகள் வருகிற 17-ம் தேதி வரை தரமணியில் உள்ள சி.பி.டி. மைதானத்தில் நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த செலவு ரூ. 12 லட்சமாகும்.

விஷ்ணுவர்த்தன், என். விஜய்சுந்தர் பிரசாந்த், ராம் பாலாஜி, சசிகுமார் முகுந்த் மற்றும் மரீக் ஜலோவிஸ் (செக்குடியரசு) போன்ற முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x