Published : 27 Nov 2014 12:08 PM
Last Updated : 27 Nov 2014 12:08 PM

உலகக் கோப்பை: ஹர்பஜன் தீவிரம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதில் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:

உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் இடம்பெறுவது மிகச்சிறப்பானது. ஒரு வீரருக்கு உலகக் கோப்பை போட்டிதான் உச்சபட்ச இலக்கு. நானும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டிருப்பதாக நம்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் காலையில் எழும்போது நேர்மறையான எண்ணத்தோடே இருக்கிறேன். உலகக் கோப்பையில் அணியில் நானும் இடம்பெறுவேன் என சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x