Published : 30 Oct 2013 12:07 PM
Last Updated : 30 Oct 2013 12:07 PM

உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார். ஹரியாணா அணிக்கு எதிராக ரோடாக்கில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்காக நிதானமாக ஆடிய சச்சின் தனது 115-வது 'முதல் தர' அரைசதத்தைப் பதிவு செய்தார்.

நேற்று ஆட்டநேர முடிவில் மும்பை அணி 75 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 122 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 55, குல்கர்னி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை வெற்றி பெற இன்னும் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் இன்றும் சச்சின் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 4 விகெட் வித்தியாசத்தில் மும்பை அணி ஹரியானா அணியை வீழ்த்தியது. சச்சின அடித்த அரை சதம் மும்பை அணியின் வெற்றிக்கு உதவியது.

இந்தப் போட்டியுடன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விடை பெறுவதாக சச்சின் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x