Published : 14 Aug 2016 12:36 PM
Last Updated : 14 Aug 2016 12:36 PM
ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவிலான டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா ஜோடி இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே - ஹீதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே ஆடுவதால் இந்திய ஜோடி அவருக்கு முன் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் அந்த சந்தேகங்களை தவிடுபொடியாக்கும் வகையில் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
ஆண்டி முர்ரே சிறந்த வீரர் என்பதால் அவருக்கு ஜோடியாக ஆடிய ஹீதர் வாட்சனுக்கு இந்திய ஜோடி நெருக்கடி கொடுத்தது. மேலும் இப்போட்டிக்கு சற்று முன்னர்தான் ஆண்டி முர்ரே ஒற்றையர் போட்டியில் கலந்துகொண்டிருந்தார் என்பதால் சற்று களைப்பாக இருந்தார். இதைப் பயன்படுத்திய சானியா - போபண்ணா ஜோடி சிறப்பாக ஆடி 67 நிமிடங்களிலேயே 6 4, 6 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை வெல்லும். அரையிறுதிப் போட்டியில் தோற்றா லும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆட இந்த ஜோடிக்கு வாய்ப்பு கிடைக்கும். அரை யிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் - ராம் ராஜிவ் ஜோ டியை எதிர்த்து ஆடவுள்ளது.
இப்போட்டிக்கு பிறகு நிருபர் களுக்கு பேட்டியளித்த சானியா மிர்சா, “ஒலிம்பிக்கில் ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் ஆட்டத் திறனை மேம்படுத்தி வருகி றோம். இன்றைய ஆட்டத்துக்கு முன்னதாக இங்கிலாந்து ஜோடி ஆடும் முறையை வீடியோவில் பார்த்து தெரிந்துகொண்டோம். அது எங்கள் வெற்றிக்கு மிகவும் உதவியது. அரையிறுதிப் போட்டி யிலும் எங்கள் வெற்றி தொடரும் என்று நம்புகிறோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT