

நேற்று, நடந்த ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் மும்பை கோவா இடையே நடந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. நேற்று மும்பை சிட்டி எஃப்.சி. அணிக்கும் எஃப்.சி. கோவா அணிக்கும் இடையே நவிமும்பை டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது.
ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தாலும் அது பலனளிக்கவில்லை. இறுதியில், கோல் எதுவுமின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில், கொல்கத்தா நார்த்ஈஸ்ட் அணிகள் மோதுகின்றன.