Published : 30 Jun 2017 07:24 PM
Last Updated : 30 Jun 2017 07:24 PM
அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் அதனை வெளியில் சொல்வதற்கில்லை என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் நான் எதைப்பற்றியும் குறிப்பாகவோ, விளக்கமாகவோ தெரிவிக்க முடியாது. நாங்கள் ஒரு அணியாக மற்றவர்களி எதிர்ப்பார்ப்புக்கு மாறாக எங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும், அதுவும் பிசிசிஐ கேட்டால் மட்டுமே வழங்க முடியும்.
இது தான் நடைமுறை, ஒரு அணியாக நாங்கள் இந்த நடைமுறைகளை மதிக்க வேண்டும். யார் இந்த விவகாரத்தை கையாள்கின்றனரோ அவர்களுக்கு ஆலோசனைகளை அளித்துள்ளோம் அவ்வளவே. இதில் வெளிப்படையாக கூறுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் ஒரு அணியாக வாரியத்துக்கும் எங்களுக்குமானதாகும் இந்த விவகாரம், எனவே நான் ஏற்கெனவே கூறியது போல் இது பற்றிய விவரங்களை அளிப்பது கடினம்.
இப்போதைக்கு இந்தத் தொடரில் முழு கவனம், இந்தத் தொடரை வெல்ல வேண்டும் அவ்வளவே. மேலும் வரும் தொடர்களுக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT