Published : 11 Feb 2017 09:55 AM
Last Updated : 11 Feb 2017 09:55 AM

கால்பந்தில் திருச்சி அணி சாம்பியன்

திருச்சியில் நடைபெற்ற கார்டினர் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டியில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஏ.எஃப்.கார்டினர் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதில் திருச்சி, கோவை, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 கல்லூரி அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிஷப் ஹீபர் கல்லூரி அணி வீரர் தேவேந்திரன் 2 கோல்களை அடித் தார். இப்போட்டியில், கோவை  நாராயணகுரு கல்லூரி அணி மூன்றாமிடமும், சென்னை நாசரேத் கலை, அறிவியல் கல்லூரி அணி நான்காவது இடமும் பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x